30/10/2024
இம்மாதிரியான
ஆன்மீகத் தகவல் அறிய
*ஸ்ரீ அம்மையப்பன் ஜோதிட நிலையம்*
ஜோதிடம் வாஸ்து பிரசன்னம்
https://chat.whatsapp.com/IjuT12qb5MP7b8BeO9Qsq1
*குபேர பூஜை*
இந்த ஆண்டு தீபாவளி குபேரருக்குரிய வியாழக்கிழமையில் வருகிறது. அதே போல் அமாவாசை அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வருகிறது. அதனால் இந்த இரண்டு நாட்களும் மகாலட்சுமியையும், குபேரரையும் வழிபடுவதற்கு ஏற்ற மிக சிறந்த நாட்களாகும்
தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேரர் வழிபாடு செய்வது வழக்கம். செல்வம் சேருவதற்காக மட்டுமின்றி வீட்டின் நன்மைகள் பலவும் நடைபெற வேண்டும். தொழிலில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் வீட்டில் லட்சுமி குபேரர் பூஜை செய்து வழிபடுவது சிறந்தது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. பொதுவாகவே வியாழக்கிழமையில் குபேரருக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் தீபாவளி அன்று லட்சுமியுடன் சேர்த்து குபேரரை வழிபடுவது இன்னும் சிறப்பானதாகும். லட்சுமி குபேரர் பூஜையை மாலை நேரத்தில், அமாவாசை திதி இருக்கும் தான் செய்ய வேண்டும்
இந்த ஆண்டு *அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 மணிக்கு தான் அமாவாசை திதி துவங்குகிறது.*
*நவம்பர் 01ம் தேதி மாலை 06.25 வரை அமாவாசை திதி உள்ளது.*
*நவம்பர் 01ம் தேதி கேதார கெளரி விரதமும் சேர்ந்தே வருகிறது.*
*தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேரர் பூஜை செய்வது சிறப்பு.*
ஒருவேளை அன்று அசைவம் சாப்பிடுவதால் பூஜை செய்ய முடியாது என்கிறவர்கள், நவம்பர் 01ம் தேதி மாலை இந்த பூஜையை செய்து வழிபடலாம்.
*கேதார கெளரி விரதம் இருப்பவர்கள் அக்டோபர் 31ம் தேதியே லட்சுமி குபேரர் பூஜையை செய்வது சிறப்பாக இருக்கும்.*
கேதார கெளரி நோன்புஎடுக்கும் வழக்கம் இல்லாதவர்கள் நவம்பர் 01ம் தேதி கூட லட்சுமி குபேரர் பூஜையை செய்து கொள்ளலாம்
*லட்சுமி குபேரர் பூஜை செய்ய நல்ல நேரமும், தேவையான பொருட்களும்*
அக்டோபர் 31 - மாலை 06.00 மணிக்கு மேல் நவம்பர் 01 - மாலை 05 மணி முதல் 06.30 மணிக்குள்
குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம்,
ரூ.1 அல்லது
ரூ.5 ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், தாமரை மலர் அல்லது
ஏதாவது மலர்கள், துளசி,
அக்ஷதை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
அவலில் செய்த ஏதாவது ஒரு இனி பதார்த்தத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
ஒரு மனைப் பலகையில் சிறிதாக கோலம் போட்டு, அதில் குபேரர் படம் அல்லது சிலை வைக்க வேண்டும்.
குபேரருக்குரிய திசை வடக்கு என்பதால் குபேரர் படத்தை வடக்கு நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும்.
நாம் கிழக்கு எல்லது மேற்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
மனைப்பலனையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரத்தை வரைந்து கொள்ள வேண்டும்.
குபேர யந்திரமாக வீட்டில் இருக்கிறது என்றால் அதை வைத்துக் கொள்ளலாம்.
இந்த யந்திரத்தில் நான்கு பக்கமும் ஸ்ரீ என மஞ்சளில் எழுதிக் கொள்ள வேண்டும்.
முதலில்
விநாயகரை வழிபட்டு விட்டு,
பிறகு குலதெய்வத்தை வழிபட்டு விட்டு,
மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி
குங்குமம், மலர்கள் அல்லது அக்ஷதை ஆகிய ஏதாவது ஒன்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்
பிறகு குபேரருக்குரிய மந்திரங்கள் தெரிந்தால் சொல்லலாம்.
தெரியவில்லை என்றால், *"ஓம் குபேராய நமஹ",*
அல்லது
*"ஓம் தனபதியே நமஹ"*
ஆகிய மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.
தாமரை பூவின் ஒவ்வொரு இதழ்களாக எடுத்து, அதில் ஒரு நாணயத்தை வைத்து,
அதன் மீது குங்குமம் வைத்து,
இந்த மந்திரங்களை சொல்லி
குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
நிறைய தாமரை மலர்கள் கிடைக்கவில்லை என்றால் ஒரே ஒரு தாமரை மலரை மட்டும் மகாலட்சுமி படத்திற்கு முன் வைத்து விட்டு, அர்ச்சனை மலர்களால் அர்ச்சனை செய்து விட்டு, நாணயங்களை மட்டும் குபேரர் படத்திற்கு முன் அடுக்கி வைக்கலாம்.
அர்ச்சனை செய்து முடித்த பிறகு மகாலட்சுமிக்கு பிரியமான கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் போன்றவற்றை படித்து மகாலட்சுமியை மனதார வழிபட வேண்டும்.
நைவேத்தியம் படைத்து, தீப, தூப ஆராதனை காட்டி, மகாலட்சுமியிடம் நம்முடைய கோரிக்கைகளை சொல்லி மனதார வழிபட வேண்டும்.
*வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டும்,*
*வீட்டில் எப்போதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்து இருக்க வேண்டும்.*
*வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.*
*அனைவரின் வாழ்விலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும்.*
*வீட்டில் நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்*
என மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.
புதிய கணக்கு துவங்குபவர்கள்
பூஜையில் அந்த நோட்டை வைத்து, வழிபட்ட பிறகு புதிய கணக்குகளை எழுத துவங்கலாம்.
*அர்ச்சனை நாணயங்களை என்ன செய்வது?*
லட்சுமி குபேர பூஜை செய்து முடித்த பிறகு பிரசாதத்தை மட்டும் நாம் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
மற்ற பொருட்களை அப்படியே வைத்து விட வேண்டும்.
மறுநாள் அர்ச்சனை செய்ய பயன்படுத்திய நாணங்களை ஒரு துணியில் முடிச்சாக கட்டி வீட்டில் பணம் வைக்கும் இடம், வியாபாரம் செய்யம் இடம் ஆகியவற்றில் வைக்கலாம்.
அர்ச்சனை செய்வதற்கு குபேர நாணயங்கள் பயன்படுத்தி இருந்தால் அவற்றை மீண்டும் அர்ச்சனை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் ரூபாய் நாணயங்களை பயன்படுத்தி இருந்தால் அவற்றை மீண்டும் அர்ச்சனை செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது.
குபேரருக்கு ஊறுகாய், சில்லரை சத்தம் ஆகியவை மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
அதனால் அவருக்கு சில்லரையால் அர்ச்சனை செய்வதும்,ஆகியவை மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் அவருக்கு சில்லரையால் அர்ச்சனை செய்வதும், சில்லரைகளை குவித்து வைத்து அதன் மீது குபேரர் சிலை வைத்து வழிபடுவதும் வீட்டில் செல்வம் வளத்தை பெருக செய்யும்.